search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை 2023 - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஆசிய கோப்பை 2023 - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் நமது வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×