என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி மழையால் தாமதம்- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு
- நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் களமிறங்குகிறார்.
நேப்பியர்:
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
போட்டி ஒரு சில நிமிடங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. லேசான மழை என்பதால் விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்