search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம்- சஞ்சு சாம்சன்
    X

    தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம்- சஞ்சு சாம்சன்

    • நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும்.
    • நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் அரை சதம் விளாசினார். இறுதியில் ரஷித் கான் மற்றும் தெவாட்டியா அதிரடியாக விளையாடி குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர்.

    இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்கள் பிடி எப்போது தளர்ந்தது என்று கேட்டால், கடைசி பந்து தான் என்று சொல்ல வேண்டும். இந்த சூழலில் பேசுவதே கடினமாக உள்ளது. எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன். கொஞ்சம் எமோஷனலாக உள்ளேன். சாதாரண நிலைக்கு வந்த பின், நிச்சயம் ஆட்டத்தில் எங்கு தோல்வியடைந்தோம் என்று சொல்ல முடியும்.

    நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். நான் பேட்டிங் செய்யும் போது 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன். நிச்சயம் 196 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு தான்.

    பெரிதாக பனிப்பொழிவு இல்லாத போது, எங்கள் பவுலர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். நிச்சயம் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவது எளிதல்ல. 197 ரன்கள் இலக்கு, அதிலும் பனிப்பொழிவு வராது என்றால், அந்த ஸ்கோரை நாங்கள் தாராளமாக எடுத்துக் கொள்வோம். பவுலிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

    Next Story
    ×