search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்
    X

    பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்

    • குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் 72 ரன்களை எடுத்திருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய சுதர்சன் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் 4, மனோகர் 1, விஜய் சங்கர் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷாருக்கான் 8 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ராகுல் தெவாட்டியா- ரஷித்கான் ஜோடி அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. இறுதி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்தில் ரஷித்கான் 10 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 5-வது பந்தில் தெவாட்டியா 3 ரன்கள் எடுக்க முயற்சித்து 2 ரன்னில் ரன் அவுட் ஆனர். கடைசி பந்தில் குஜராத் அணிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித்கான் அந்த பந்தை பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

    ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×