என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
போட்டியின் போது குறுக்கிட்ட நாய்: ஹர்திக்... ஹர்திக் என முழக்கமிட்ட ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ
- நேற்றைய போட்டியின் நடுவே நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது.
- உடனே சுற்றியிருந்த ரசிகர்கள் ஹர்திக்.. ஹர்திக் என முழக்கமிட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடரில் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தொடக்கம் முதல் முடிவு வரை சில சம்பவங்கள் அரங்கேறியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. அந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்து தள்ளினர்.
அந்த வகையில் இந்த போட்டிக்கான டாஸ் போடும் போது மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா என அழைக்கும் போது, சுற்றியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என முழக்கமிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா முகம் சற்று மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதை தொடர்ந்து பாண்ட்யா பீல்டிங் சரி செய்யும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பல இடங்களில் மாற்றி மாற்றி பீல்டிங் நிற்க சொன்னார். இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் பாண்ட்யாவை திட்டி வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலானது.
இதனையடுத்து போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. ரோகித்.. ரோகித் என முழக்கமிட்ட ரசிகர்கள் நாயை பார்த்ததும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர்.
மேலும் அவர் பெவிலியனுக்கு செல்லும் போது அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ரோகித் தான் எப்போதுமே மும்பை கேப்டன் என பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் பேனர் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோகித் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் என அனைவரும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்