search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வாஷிங்டன் சுந்தர் அரைசதம்- நியூசிலாந்துக்கு 220 இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    வாஷிங்டன் சுந்தர் அரைசதம்- நியூசிலாந்துக்கு 220 இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
    • வாஷிங்டன் சுந்தர் 64 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான தவான் 28 ரன்னிலும், ரிஷப்பண்ட் 10 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், தீபக் ஹூடா 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.

    இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.

    Next Story
    ×