search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சாம்பியன் வீரர்கள் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள்- கோலி ஃபார்ம் குறித்து பாண்டிங் கருத்து
    X

    சாம்பியன் வீரர்கள் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள்- கோலி ஃபார்ம் குறித்து பாண்டிங் கருத்து

    • நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
    • பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மீட்டு விட்டார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக சதம் அடித்தார். அதன் பிறகு மூன்றரை ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை.அதுபோக கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்சில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை.

    நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார்.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியவதாவது:-

    ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது. எனினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டு மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள். இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்.

    இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்து உங்களுக்கு நடந்து கொண்டே இருந்தால் உங்களால் பேட்டிங் செய்ய முடியாது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம்.

    ஆனால் பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

    ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்கிறது.

    Next Story
    ×