search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா அக்சர் படேல்?
    X

    செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா அக்சர் படேல்?

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    Next Story
    ×