search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி- 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X
    இந்திய கிரிக்கெட் அணி 

    இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டி- 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்னுடன், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக்அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார். கிரிஷ் ஜோர்டன் ரன்கள் அடித்தார்.

    19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×