search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல் - சேப்பாக் அணி வெற்றி பெற 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
    X

    கேப்டன் ஷாருக் கான்

    டிஎன்பிஎல் - சேப்பாக் அணி வெற்றி பெற 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

    • முதலில் ஆடிய கோவை அணி 170 ரன்களை எடுத்தது.
    • கேப்டன் ஷாருக் கான் 28 பந்தில் 51 ரன்களை குவித்தார்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்தகட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான அஷ்வின் வெங்கட்ராமன் 6 ரன்னில் அவுட்டானார். சுரேஷ்குமார் 22 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சாய் சுதர்சன் 25 ரன், ஷிஜித் சந்திரன் 17 ரன், முகிலேஷ் 2 ரன் எடுத்து வெளியேறினர். செல்வகுமார் டக் அவுட்டானார். அபிஷேக் தன்வார் 28 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடினார். அரை சதமடித்த அவர் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 171 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×