search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அடுத்தடுத்து 2 போட்டியில் கோல்டன் டக் அவுட்- ரகானேவை வறுத்தெடுத்த ரசிகர்கள்
    X

    அடுத்தடுத்து 2 போட்டியில் கோல்டன் டக் அவுட்- ரகானேவை வறுத்தெடுத்த ரசிகர்கள்

    • ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
    • கேரளா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.

    ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக ரகானே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் ஆனார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரான ஜெய் கோகுல் பிஸ்தா முதல் பந்திலும் ரகானே 2-வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

    கடைசி 2 இன்னிங்சில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×