search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் தர்மசாலாவில் இருந்து மாற்றம்
    X

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் தர்மசாலாவில் இருந்து மாற்றம்

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா வென்றது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி தர்மசாலாவில் நடப்பதாக இருந்தது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. புல் இல்லாமல் திட்டுகளாக காணப்படும் அவுட் பீல்டை இன்னும் 16 நாட்களில் தயார்படுத்துவது கடினம். அத்துடன் அடுத்த சில நாட்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது.

    எனவே இந்தப் போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.

    இந்த டெஸ்ட் இந்தூர் அல்லது ராஜ்கோட்டுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது. தர்மசாலாவில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு எந்த போட்டிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×