search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா உள்பட 3 வீரர்கள் விலகல்
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா உள்பட 3 வீரர்கள் விலகல்

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×