என் மலர்tooltip icon

    சினிமா

    உண்மையான ஹீரோக்களுக்கு முன்பு ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள் - மோடிக்கு சித்தார்த் கண்டனம்
    X

    உண்மையான ஹீரோக்களுக்கு முன்பு ஹீரோ போல் நடிப்பதை நிறுத்துங்கள் - மோடிக்கு சித்தார்த் கண்டனம்

    புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துமாறு மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார். #PulwamaAttack
    பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் பற்றி தான் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.

    உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன’ என்று அவர் பேசினார்.



    பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து டுவிட்டரில் நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

    புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.

    பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PulwamaAttack #PMModi #Siddharth

    Next Story
    ×