search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாடு விரும்பும் நல்ல முடிவு இதுதான் - தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு வைரமுத்து கண்டனம்
    X

    நாடு விரும்பும் நல்ல முடிவு இதுதான் - தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு வைரமுத்து கண்டனம்

    ஸ்டெர்லைட் மூடல், பெட்ரோல் விலை குறைப்பு, பொதுமக்கள் போராட்டம் முடிவு இதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-



    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசும், பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது என்று மத்திய அரசும், போராட்டம் முடிவுக்கு வந்தது என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும்’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BanSterlite #SaveThoothukudi

    Next Story
    ×