என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஆண்டனி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் வெளியாகி இருக்கும் சாயம் படத்தின் விமர்சனம்.
    ஊர் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், மனைவி சீதா மற்றும் மகன் அபி சரவணனுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் அபி சரவணன் சாதி வேறுபாடில்லாமல் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இவருடைய அத்தை மகள் ஷைனி, அபி சரவணனை காதலித்து வருகிறார். ஆனால் அவரோ பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

    ஒரு கட்டத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அபி சரவணன், ஷைனி இருவருக்கும் திருமணத்தை செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள் அபி சரவணன், தனது நண்பருடன் ஷைனி பேசுவதை தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் பிரச்சனை வர, அபி சரவணன் தனது நண்பரை கொன்றுவிடுகிறார்.

    ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஆண்டனி இந்த கொலையை சாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார். ஜெயிலில் இருக்கும் அபி சரவணனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. இறுதியில் கொலை செய்ய வரும் கும்பலிடமிருந்து அபி சரவணன் தப்பித்தாரா? சாதி பிரச்சனை தீர்ந்ததா? ஜெயிலில் இருந்து அபி சரவணன் வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபி சரவணன் முற்பகுதியில் சாதுவாகவும், பிற்பாதியில் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷைனியின் நடிப்பு படத்திற்கு பெரியதாக எடுபடவில்லை. பொன்வண்ணன், போஸ் வெங்கட், தென்னவன் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. 

    இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஆண்டனி. இவர் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். சாதிப் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஆண்டனி. நல்ல கதை களத்தை கொண்டு திரைக்கதை செய்வதில் சிரமப்பட்டிருக்கிறார். 

    நாக உதயனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சலீம் - கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் 'சாயம்' மாயம் செய்யவில்லை.
    து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் விமர்சனம்.
    நாயகன் விஷால் போலீஸ் எஸ்ஐ பதவிக்கு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய அப்பா மாரிமுத்து போலீஸ் ஏட்டாக இருக்கிறார். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார்.

    ரவீனாவை லோக்கல் ஏரியாவில் இருக்கும் ரவுடியின் தம்பி காதலிக்கிறார். ஆனால், ரவீனா அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமடையும் ரவுடியின் தம்பி ரவீனாவை மிரட்டி காதலை சொல்ல வைக்கிறார். இது விஷாலுக்கும், ரவுடிக்கும் தெரிந்து தம்பியை அசிங்க படுத்துகிறார்கள். 

    இதனால், ரவீனாவை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக வேறொரு கும்பல் ரவீனாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள். இறுதியில் தங்கை ரவீனாவை கொலை செய்தவர்களை விஷால் கண்டு பிடித்தாரா? ரவீனாவை கொலை செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஷால் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். தங்கை பாசம், சமுதாயத்தின் மீது அக்கறை, சாமானிய மனிதனின் கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். வில்லன் பாபு ராஜ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மாரி முத்து. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.

    விமர்சனம்

    சாமானிய மனிதனின் கோபத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் து.ப.சரவணன். வெவ்வேறு திசையில் செல்லும் மூன்று கிளை கதைகளை ஒன்றாக அமைத்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படத்திற்கு உண்டான அம்சங்களை வைத்தே படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலம். பிற்பாதியில் யூகிக்கும் படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு பலவீனம்.

    கவினின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் 'வீரமே வாகை சூடும்' வீரம் குறைவு.
    விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன், பிரவீன், ரித்விகா, அஞ்சுகுரியன், ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் விமர்சனம்.
    தாயை இழந்து தந்தையுடன் வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் அசோக் செல்வன். திருமண தேதி முடிவு செய்யப்பட்டு அதன் பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கிறார். சிறந்தவன் இருந்தாலும் கோவத்தில் அரக்கனாகவும், தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்.

    ஒரு ரிசார்ட்டில் இருக்கும் அறைகளை சுத்தம் செய்யும் ரூம் மேனேஜ்மெண்ட் வேலை பார்த்து வரும் ஏழை இளைஞன் மணிகண்டன். கொடுக்கும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சொல்பவர். தனக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருந்து வருகிறார்.

    பிரவீன் - ரித்விகா
    பிரவீன் - ரித்விகா

    சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவரின் மகன் அபிஹாசன். நண்பர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அவருடைய முதல் படத்தில் நடித்து அதன் வெளியீட்டுக்காக காத்திருப்பவர். தன்னுடைய சிந்தனை மட்டுமே சரியானது என்று நினைத்து, உலகம் வேறு போக்கில் தப்பாக இயங்குவதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வருபவர் பிரவின். ஐடியில் பணிபுரிந்து ஆன்சைட்டில் வேலைக்கு செல்ல காத்திருக்கிறார். பணமும் புகழும் தான் உலகில் மதிப்பை அளிக்கும் என நம்புகிற இவர், யாரிடமும் உதவி கேட்டு தன் மதிப்பை இழந்திடக்கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகிறார்.

    அஞ்சுகுரியன் - அனுபமா - கே.எஸ்.ரவிகுமார் - அபிஹாசன்
    அஞ்சுகுரியன் - அனுபமா - கே.எஸ்.ரவிகுமார் - அபிஹாசன்

    இவர்கள் நான்கு பேரும் ஒரு மரணத்திற்கு காரணமாகி விடுகின்றனர். வெவ்வேறு திசையில் பயணிக்கும் இவர்கள் எப்படி ஒரு மரணத்தோட தொடர்பானார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன், அபிஹாசன், மணிகண்டன், பிரவின் என அனைவரின் நடிப்பும் எதார்த்தமாகவும் கதையின் நீரோட்டமாகவும் தென்படுகிறது. நாயகிகளாக நடித்திருக்கும் ரித்விகா, அஞ்சுகுரியன் மற்றும் ரியா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் தோன்றும் சிறு சிறு கதாப்பாத்திரங்களும் அந்த கதையிலேயே பயணித்து அவர்களின் நடிப்பையும் எதார்த்தமாக வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

    அஞ்சுகுரியன் - அபிஹாசன்
    அஞ்சுகுரியன் - அபிஹாசன்

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான உணர்வுபூர்வ திருப்தியை தருகிற படமாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான திரைக்கதை, சினிமாவுக்கான எந்த பூச்சும் இல்லாமல் கதையை தவிர்த்து வேறு எங்கும் செல்லாமல் அழகாக அந்த வாழ்க்கைக்குள் நம்மை கொண்டு சேர்த்து விடுகிறார் இயக்குனர் விஷால் வெங்கட். 

    படத்தின் காட்சிகளை படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், பார்வையாளர்களை அந்த இடத்திற்கே கடத்தி கொண்டு போகும் அளவிற்கு காட்சிபடுத்தியிருக்கிறார். படத்திற்கு கூடுதல் பலம் இசை. ரதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நல்ல நேரம்.
    ரமேஷ் சுப்ரமணியன் இயக்கத்தில் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஏஜிபி படத்தின் விமர்சனம்.
    ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்த நாயகி லட்சுமி மேனன், அவருடைய அக்கா மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒருவரை காதலித்து வரும் நாயகி, தன்னுடைய காதலனுக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

    அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போகிறார். பதறி போகும் லட்சுமி மேனனுக்கு மருத்துவமனையில் விசாரித்தால், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். இறுதியில் லட்சுமி மேனன், தொலைந்த தன் காதலனை கண்டுபிடித்தாரா? இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனன், ஸ்கிசோபெரினியா எனும் மனநோயால் பாத்திக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய எதார்த்த நடிப்பே படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. இவருக்கு இணையாக நடித்திருக்கும் ஆர்.வி.பரதனுக்கு முதல் படம் என்றாலும் அதனை எந்த இடங்களிலும் தோன்றும் படி அவரின் நடிப்பு இல்லை. 

    விமர்சனம்

    துணை நடிகர்களாக நடித்திருக்கும் அனைவரும் புதுமுகம் என்பதால் அவர்களுடைய நடிப்பு சில இடங்களில் நடிப்பு என்பதை வெளிபடுத்தும் விதமாகவே இருக்கிறது. 

    இப்படத்தின் கதையும் திரைக்கதையும் படத்திற்கு பலம். படத்தின் தொடக்கத்திலேயே தேவையற்ற கதையை சொல்லாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று சுவாரசப்படுத்தியிருப்பது பாராட்டக்குறியது. இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன் அவர் பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

    திரில்லர் படம் என்பதை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி அவருடைய காட்சிபதிவின் மூலம் 
    சுவாரசியபடுத்த முடியவில்லை. இசையமைப்பாளர் ஜெயகிரிஷ் அவருடைய பின்னணி இசையின் மூலம் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

    மொத்தத்தில் 'ஏஜிபி' சுவாரஸ்யம் குறைவு.
    தர்புகா சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் முதல் நீ முடிவும் நீ படத்தின் விமர்சனம்.
    பள்ளி, கல்லூரி காலத்தின் வாழ்க்கையை எப்போது படமாக்கினாலும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த படமும் நம் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 90களின் இறுதியில் பள்ளி இறுதியாண்டில் இருக்கும் நண்பர்கள் கூட்டம் இனம்புரியாத ஈர்ப்பு, அன்பு, மாணவர்களுக்கேயுரிய மோதல் என்று எல்லாமுமாகச் சேர்ந்து பள்ளி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். சிலருக்குள் காதல் மலர்ந்தும், சிலர் காதல் நிராகரிப்பட்டும் கலவையான உணர்ச்சிகளோடு பள்ளிப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.

    இடைவேளை வரைக்குமான இந்த வாழ்க்கைப் பதிவுகள் ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டிருக்கிறது. 
    வகுப்பறை கலாட்டாக்கள், கேசட் கடை கேலிகள், பிரிவு உபசார விழா நேரத்தில் நடக்கும் காட்சிகள் என்று நம்மைப் பள்ளிக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார் இயக்குநர் தர்புகா சிவா.

    விமர்சனம்

    இடைவேளைப்பிறகு எதிர்ப்பாராக வாழ்க்கைப் பின்னணியோடு சந்திக்கும் நண்பர்கள் காதல் கைகூடாத, தவறுகளைத் திருத்தி கொண்டிருக்கலாமே என்று நினைக்கிற பக்குவமான மனநிலையுடன் சந்திக்கிறார்கள். உணர்ச்சிப் பூர்வமான அந்த காட்சிகள் கலங்க வைக்கிறது. அதுவும் எப்போதும் கேலியும், கிண்டலுமாக இருக்கும் சைனீஷ் என்கிற ஹரீஷ் நடிப்பும் வாழ்க்கைப் பின்னணியும் கேத்தரின் என்கிற பூர்வா ரகுநாத் வாழ்க்கையும் உருக்கம்.

    நாயகனாக வரும் வினோத் என்கிற கிஷான் தாஸ், அவருக்கு இணையாக ரேகா என்கிற மேத்தா ரகுநாத் ஆகியோர் நல்ல தேர்வு. மற்றபடி அம்ரிதா மண்டரின், சரண்குமார் ராகுல் கண்ணன், மஞ்சுநாத, வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன், ஹரிணி ஆகியோர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

    விமர்சனம்

    இசையமைப்பாளராக இருக்கும் தர்புகா சிவா இயக்குநராக மாறி அழகான வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். சுஜித் சரங் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் காட்சிகளை அழகூட்டுகின்றன. தர்புகா சிவா இசையில் முதல் நீ முடிவும் நீ பாடல் க்ளாஸ் பாடல்

    மொத்தத்தில் 'முதல் நீ முடிவும் நீ' ஆட்டோகிராப்.
    ஜி ஆர் எஸ் இயக்கத்தில் ராதிகா சரவணன் விஜி சந்திரசேகர் லவ்லி சந்திரசேகர் மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மருத படத்தின் விமர்சனம்.
    சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

    கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். பாரதிராஜாவின் உதவியாளரான இவர், மண் மணம் மாறாமல் அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.ஆர்.எஸ். இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், திரைப்படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார்.

    விமர்சனம்

    ஜிஆர்எஸ் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், தாய் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு இணையாக போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜி சந்திரசேகர். இவருடைய மிரட்டலான நடிப்பு ஒரு சில இடங்களில் மிகைப் படுத்தலாக இருக்கிறது.

    ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சரவணன். மாரிமுத்து மற்றும் நாயகியாக நடித்திருக்கும் லவ்லின் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    விமர்சனம்

    செய்முறை ஒன்றை வைத்து மட்டும் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியது சாமர்த்தியம். இருப்பினும் படத்தின் முதல்பாதியில் ஜிஆர்எஸ் செய்யும் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதுபோல் இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறது.

    மொத்தத்தில் 'மருத' சிறப்பான விருந்து... ஆனால் சுவை குறைவு.
    ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரிராவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேள் படத்தின் விமர்சனம்.
    சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கி, அதை செலுத்தாதவர்களை அடித்து உதைத்து பணம் வாங்கும் அடியாள் வேலையை பார்க்கிறார் பிரபுதேவா. ஆதரவற்றவரான பிரபுதேவாவை சந்திக்கும் ஈஸ்வரி ராவ், நான்தான் உனது தாய் என்று கூறுகிறார். கோபத்தில் ஈஸ்வரி ராவை அடித்து உதைத்து அனுப்பும் பிரபுதேவா, ஒரு கட்டத்தில் தாய் மீது பாசம் ஏற்பட்டு அவரை சேர்த்துக் கொள்கிறார்.

    இந்நிலையில், ஒரு ஈஸ்வரி ராவை மர்ம நபர்கள் கடத்துகிறார்கள். தாயை தேட ஆரம்பிக்கும் பிரபுதேவா, இறுதியில் ஈஸ்வரி ராவை கண்டுபிடித்தாரா? இல்லையா? கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, அடியாள் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இவருடைய நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. அடியாளாகவும், பாசக்காரனாகவும் நடித்து மனதில் பதிகிறார் பிரபுதேவா. 

    நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே, படத்தில் வந்து சென்றிருக்கிறார். பெரிதாக வேலை இல்லை. இவருடன் பயணிக்கும் யோகி பாபு அதிகம் சிரிக்க வைக்கவில்லை. பாசம் காண்பித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ். இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    விமர்சனம்

    தாய், மகன் பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிகுமார். படத்திற்கு பாசம் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டதால், அதிகமாக ரசிகர்களை கவரவில்லை. 

    சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக தாய்ப்பாசப் பாடல் சிறப்பு. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதி படத்திற்கு பலம். கதைக்களத்தை உணர்ந்து வேலை செய்திருக்கிறார். 

    மொத்தத்தில் ‘தேள்’ விஷம் குறைவு.
    எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் மடோனா செபாஸ்டியன் சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் விமர்சனம்.
    கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரில் செல்வாக்குடன் இருக்கிறார் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரை மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. 

    இந்நிலையில் ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.

    விமர்சனம்

    இறுதியில் இந்த பிரச்சனைகளை சசிகுமார் எப்படி சமாளித்தார்? கொலையானது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கையான நடிப்பு தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியனுக்கு பெரியதாக வேலை இல்லை. பாடல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார்.

    விமர்சனம்

    அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மகேந்திரன். இந்தர் குமார், ஹரீஷ் பெராடி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. சூரியின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 

    ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கமர்ஷியல் படத்திற்கு உண்டான அம்சங்களை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பெரியதாக ரசிகர்களை கவரவில்லை.

    என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. திபு நினன் தாமஸ் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் 'கொம்பு வச்ச சிங்கம்டா' கூர்மை குறைவு.
    ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள சினம் கொள் படத்தின் விமர்சனம்.
    பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளியான அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார். அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை ராணுவம் அபகரித்துக்கொள்ள, இருக்க இடம் இல்லாமல் சுற்றி அலைபவருக்கு அவருடைய போராளி நண்பர்கள் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். 

    அவர்களின் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் அரவிந்தன், அவர்களோடு சந்தோஷமாக வாழும் நிலையில், அவரை சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று நடக்க, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனது, என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் சில மாதங்களில் மாயமான முறையில் உயிரிழக்கும் அதிர்ச்சி தகவலை உரக்க சொல்வதோடு, தமிழர்களின் சொத்துக்களையும், நிலங்களையும் அபகரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், அவர்களை சொந்த நாட்டில் எப்படி அகதிகளாக நடத்துகிறார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லும் ஒரு முயற்சியாக சினம் கொள் திரைப்படம் உருவாகியுள்ளது.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பத்தில் தமிழர்களின் அவலங்களையும், அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில், தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதற்காக தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    விமர்சனம்

    அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், பாலா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

    எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    ஈழத் தமிழர்களை பற்றிய படம் என்றாலே டாக்குமெண்டரி பாணியில் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டி முழுக்க முழுக்க ஒரு பரபரப்பான கமர்ஷியல் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

    மொத்தத்தில், ’சினம் கொள்’ பார்க்கலாம்.
    ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் விமர்சனம்.
    ரேடியோ ஜாக்கி வேலை பார்த்து வருகிறார் அஸ்வின். இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். எழுத்தாளராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது கணவர் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.

    இதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜு அஸ்வினி என்றும் கூறுகிறார். தேஜு அஸ்வினியை அவந்திகா பார்க்க வேண்டும் கூற, தேஜு அஸ்வினியுடன் அஸ்வின் ஒரு டீல் பேசி இருவரையும் சந்திக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் தேஜு அஸ்வினி மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின். 

    விமர்சனம்

    இறுதியில், நாயகன் அஸ்வின் தனக்கு பெண் பார்த்த அவந்திகா மிஸ்ராவை திருமணம் செய்தாரா? காதலிக்க ஆரம்பித்த தேஜு அஸ்வினியை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின், காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. அஸ்வினும் காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின், புகழ் காம்பினேஷன் இந்த படத்தில் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை.

    விமர்சனம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஹரிஹரன். முதல் பாதி கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாதி கவரவில்லை. நிறைய காதல் காட்சிகள் படத்தில் வந்தாலும், பெரியதாக மனதில் ஒட்டவில்லை என்பது வருத்தம். காட்சிகளில் இடம் பெறும் வசனங்கள் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. ஒரு சில காட்சிகள் பார்க்கும் போது, அஜித் நடித்த வாலி மற்றும் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களின் காட்சிகள் நியாபகப்படுத்துகிறது.

    விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். 

    மொத்தத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’ சொல்லாமலே இருக்கலாம். 
    ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தான்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்பன் படத்தின் விமர்சனம்.
    கதாநாயகன் விதார்த் ஐடிஐ முடித்துவிட்டு காவல்துறையில் சேரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். கார்ப்ரேஷனில் பணிபுரியும் விதார்த்தின் தந்தை மாரிமுத்து, விதார்த் வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றி திரிந்து வருவதால் அவரிடம் கோபித்துக் கொள்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க, விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவரும் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்கும் சமயத்தில் கனவில் அவரின் தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல் தோன்றுகிறது. அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் அந்த விபத்து நடந்துவிடுகிறது. 

    விமர்சனம்

    இது விபத்தல்ல கொலை முயற்சி என்று புரிய, இது ஏன் நடத்தப்பட்டது என்று தினம் தினம் கனவில் தேடி செல்கிறார். உண்மையில் இது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் விதார்த் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகனாக நடித்திருக்கும் விதார்த்திற்கு இது 25-வது படம். இவருடைய 25வது படம் என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இப்படம் அவருக்கு அமைந்திருக்கிறது. எதார்த்த நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். 

    விமர்சனம்

    இதுவரை துணை நடிகையாக நடித்த தான்யா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு தனித்துவமாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தன் பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் பயணித்த மாரிமுத்து இப்படத்தில் அழகான தந்தையாக இடம் பெற்றிருக்கிறார். இவருடைய நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம் பெற்ற அனைவரும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதையும் திரைக்கதையும் எந்த இடத்திலும் இவர் புதுபட இயக்குனர் என்று தோன்றும் படி இல்லை. திரைக்கதையை அழகாக கொண்டு சென்று இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் டுவிஸ்ட் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. 

    விவேகானந்த் சந்தோஷ் சிறப்பான ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ”கார்பன்” கவர்ந்தவன். 
    கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதிஸ் பவித்ரா லட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் நாய் சேகர் படத்தின் விமர்சனம்.
    ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஸ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஸை கடித்து விடுகிறது.

    இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது. மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதிஸ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை நிரூபித்திருக்கிறார். நாயாக குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கிறார். நாய்க்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் மிர்ச்சி சிவா ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து இறுதியில் சிரிப்போடு முடித்து இருக்கிறார். கதாபாத்திரங்களில் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக சதிஸின் திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறார். 

    விமர்சனம்

    அஜீஷும் மற்றும் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் பொழுது கண்களுக்கு மிகவும் பிரஷாக காட்சி அளிக்கிறது.

    மொத்தத்தில் 'நாய் சேகர்' கலகலப்பு.
    ×