என் மலர்
சினிமா செய்திகள்

கரூர் நெரிசலில் நீங்க சாகலையா? - மோசமாக கமெண்ட் செய்த விஜய் ரசிகருக்கு லிவிங்ஸ்டன் மகள் பதிலடி
- விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகளிடம் விஜய் ரசிகர் ஒருவர் தெனாவட்டாக பேசி வாங்கி கட்டியுள்ளார்.
ஜோவிடா லிவிங்ஸ்டன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா லிவிங்ஸ்டன் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவின் கமெண்ட்ஸ் செக்ஷனில் விஜய் ரசிகர் ஒருவர், "உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேள்வி கேட்டார்.
இந்த கேள்வியால் கடுப்பான ஜோவிடா, "ஓ... ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன்" என்று பதிலடி கொடுத்தார்.
ஜோவிடாவின் இந்த பதிலடி இணையத்தில் வைரலாக பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.






