search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எனக்கு இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது.. கதறி அழுத ரக்‌ஷிதா..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    எனக்கு இதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது.. கதறி அழுத ரக்‌ஷிதா..

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 73-வது நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 73-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் போட்டியாளர்கள் கடந்த கால நினைவுகளை பகிரும் படி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர்ந்து வந்தனர். அப்போது ரக்‌ஷிதா, நான் கடவுள் கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான. இதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்கா என்றும் தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தைய கடைசி வரைக்கும் என்கூட கொடுக்கனும் அத நான் நல்ல படியா பாத்துக்கணும் என்று கதறி அழுத படி கூறினார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×