search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இங்க இருக்க யார் சொல்றதையும் நான் கேட்கமாட்டேன்.. விதிகளை மீறிய அசீம்..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    இங்க இருக்க யார் சொல்றதையும் நான் கேட்கமாட்டேன்.. விதிகளை மீறிய அசீம்..

    • பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 51-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் பழங்குடியினரான அசீம் நான் வீட்டின் உள்ளே செல்கிறேன் என்று கூறுகிறார். இதற்கு சக போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அசீம் நான் நீங்க இல்ல இங்க யார் சொல்றதையும் கேட்கமாட்டேன் என்று வீதிகளை மீறி பேசுகிறார். இதனால் கடுப்பான விக்ரமன் தனிப்பட்ட நபருக்காக விளையாட்டு இல்லை அசீம் வெற்றி பெற்றால் அது செல்லாது என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    Next Story
    ×