தணிக்கை சான்றிதழ் இழுபறி... நீதிமன்றத்தை நாடும் 'ஜன நாயகன்'!

தணிக்கைச் சான்றிதழ் இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம்அரசியல் உள்நோக்கம் என சிடிஆர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
தணிக்கை சான்றிதழ் இழுபறி... நீதிமன்றத்தை நாடும் 'ஜன நாயகன்'!
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.

கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அரசியல் உள்நோக்கத்தோடு படத்திற்கு சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com