என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இதோ வரேன்டா... சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு
Byமாலை மலர்4 April 2021 8:37 AM GMT (Updated: 4 April 2021 8:37 AM GMT)
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் சுல்தான் படத்தின் தயாரிப்பாளரை ஒருவர் கோபப்படுத்தி இருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபுவின் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர், சுல்தான் திரைப்படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று பதிவு செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா’ என்று பதிவு செய்திருக்கிறார்.
புதிய படங்கள் திரைக்கு வந்து சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்ததும், தயாரிப்பாளர் பக்கத்திலேயே பதிவு செய்ததும் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X