என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
Byமாலை மலர்21 March 2021 7:46 AM GMT (Updated: 21 March 2021 7:46 AM GMT)
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் உதவியால் படித்த மாணவியை பார்த்து நடிகர் கார்த்தி நெகிழ்ந்து போனாராம்.
2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அம்மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை மூலம், சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.
பொறியியல் படிப்பை நிறைவு செய்த அந்த பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார். அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த அந்தப் பெண்ணை நடிகர் கார்த்தி நெகிழ்ந்து பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X