என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் - நடிகர் அக்ஷய்குமார்
Byமாலை மலர்29 March 2020 7:03 AM GMT (Updated: 29 March 2020 7:03 AM GMT)
ஊரடங்கு சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார் என நடிகர் அக்ஷய்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடிகர் -நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், கருத்துப் பதிவையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் வெளியில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக பலரும் ஆதங்கப்படுகிறார்கள். இதனை பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்கனவே கடுமையாக சாடினார்.
“‘ஊரடங்கின் அர்த்தம் புரியாமல் சுற்றுகிறீர்களே, உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்களும், உங்கள் குடும்பமும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று சிந்தியுங்கள். யாருமே உயிரோடு இருக்க முடியாது. படங்களில் நான் ஹெலிகாப்டர்களில் தொங்கி இருக்கிறேன். இன்று நமது வாழ்க்கையும் அதுமாதிரி அந்தரத்தில் தொங்குகிறது. முட்டாளாக வெளியே சுற்றாதீர்கள் என்று கண்டித்தார்.
தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், “இப்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார். ஒவ்வொருவரும் இத்தகைய சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X