என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பிரபல நடிகர்
Byமாலை மலர்25 Dec 2019 6:25 AM GMT (Updated: 25 Dec 2019 6:25 AM GMT)
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், சமீபத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தான் நழுவவிட்டதாக, பிரித்விராஜ் சமீபத்திய பட விழாவில் தெரிவித்தது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசிபர் படம் ரிலீசான சமயத்தில், ரஜினியிடமிருந்து அவரது படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாக பிரித்விராஜ் கூறினார்.
தான் யாருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை என்றும், ரஜினி படத்தை இயக்க முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்கி அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், அதனை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X