என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் - அதிதிராவ்
Byமாலை மலர்14 Nov 2019 1:54 PM GMT (Updated: 14 Nov 2019 1:54 PM GMT)
காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதிராவ், அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் என்று கூறியிருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் சைக்கோ. டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார். டிசம்பர் 27ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்துள்ளார் அதிதி ராவ்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘அனைத்து இயக்குனர்களுமே எனது குருநாதர்கள். அதனால் ஒரு கதையில் நடிக்க கையெழுத்திடும்போது அந்த படத்தை இயக்குவது யார் என்பதை தான் நான் முதலில் கவனிப்பேன். அதன் பிறகு அந்த கதையில் என் கதாபாத்திரம் என்ன என்பதை கேட்பேன்.
ஏற்கனவே பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வரும்போது பெருமகிழ்ச்சி அடைவேன். காரணம், மீண்டும் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் என்னுடைய திறமையை நம்புகிறார்கள் என்று அர்த்தம். அது ஒரு அற்புதமான உணர்வு. அதுபோன்று நிகழும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக நினைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X