என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சூரரைப் போற்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா
Byமாலை மலர்27 Sep 2019 11:42 AM GMT (Updated: 27 Sep 2019 11:42 AM GMT)
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார் 40 நாட்கள் வரை நீடித்து வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 3 நாட்கள் சிறுசிறு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளன. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க காசுகளை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X