என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மக்களை நாய் என்று கூறிய சாக்ஷிக்கு எதிர்ப்பு
Byமாலை மலர்7 Sep 2019 11:03 AM GMT (Updated: 7 Sep 2019 11:03 AM GMT)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கெஸ்ட்டாக சென்றிருக்கும் சாக்ஷி, வெளியில் இருக்கும் மக்களை நாய் என்று கூறியதால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா ஷெரினும் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.
இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டுவிட்டு தனியாக சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்த சாக்ஷி ‘நாய்கள் ரோட்ல குரைக்கும். அத பத்தி கவலைப்படுவியா...’ ‘நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன்’ என்றும் தெரிவித்தார்.
இதனை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் சாக்ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாக்ஷியின் இந்த செயலுக்கு எதிராக இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X