என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் வெளியானது
Byமாலை மலர்1 Sep 2019 12:33 PM GMT (Updated: 1 Sep 2019 12:33 PM GMT)
பிகில் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடியுள்ள வெறித்தனம் பாடல் யூடியூபில் வெளியானது.
இளையராஜாவிலிருந்து பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள விஜய், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல்கூட பாடவில்லையே என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் வெறித்தனம் பாடலின் புரோமோ வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள், ரசிகர்களிடயே இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது.
இந்நிலையில், இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது. ”நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம், வெறித்தனம் இன்னா இப்ப லோக்கலுன்னா” என தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X