search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மதுமிதா, எஸ்.வி.சேகர்
    X
    மதுமிதா, எஸ்.வி.சேகர்

    மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

    மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23-ந்தேதி தொடங்கிய நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

    100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார இறுதியில் சாக்ஷி வெளியேற்றப் பட்டதை அடுத்து கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். அவரை அடுத்து சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் போட்டியாளராக மீண்டும் களம் இறங்கினார்.

    வனிதாவின் வருகையால் அடுத்து பல்வேறு பிரச்சினைகள் மூண்டன. வீட்டில் இருந்த போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிந்தனர். வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், அடிமைப்படுத்துவதாகவும் மதுமிதா ஆதங்கப்பட்டார். 

    பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    கமலுடன் மதுமிதா

    பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப் பட்டார்” என்று அறிவித்தார்.

    இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:- “மதுமிதாவை தற்கொலைக்கு
    தூண்டியவர் யார் என கண்டு பிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிராவுல சில வேலை செய்ய வில்லையா? இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் தமிழக காவல்துறைத்
    தலைவரையும், தமிழக முதல்வர் அலுவலகத்தையும் டேக் செய்துள்ளார்.

    எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவுக்கு பதில் கமெண்ட் வெளியிட்டுள்ளவர்கள், மது விவகாரத்தில் நீதி தேவை என வலியுறுத்தி, சென்னை போலீசையும் சேர்த்து டேக் செய்துள்ளனர்.

    Next Story
    ×