search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜமவுலி படத்தில் சாய் பல்லவி
    X

    ராஜமவுலி படத்தில் சாய் பல்லவி

    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
    பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமவுலி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் இயக்கி வருகிறார். 

    இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் ஐதராபாத் நகரத்தில் தொடங்கியது. ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். 

    படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் டெய்ஸி எட்கர் ஏப்ரல் மாதம் படத்திலிருந்து விலகினார். எனவே அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. 



    பரினீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×