என் மலர்
சினிமா

விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
விஜய் கொடுத்த அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Jai #Vijay #ThalapathyVijay
பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துதான் ஜெய் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வாமனன், சுப்ரமணியபுரம், ராஜா ராணி என முன்னணி கதாநாயகனாகி விட்டார்.
தற்போது ‘நீயா 2’, ‘கறுப்பர் நகரம்‘, ‘பார்ட்டி’, ‘மதுர ராஜா’ உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கும் ஜெய், தான் கதாநாயகனாக மாற விஜய் கூறிய அறிவுரை தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.
`பகவதி’ படத்துக்குப் பிறகு விஜய் சார்கிட்ட அடிக்கடி வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருந்தப்போ, `இப்படி துணை கதாபாத்திரங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க’ன்னு சொன்னார்.

அதனால் தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினேன். இப்போதும் ஒரேமாதிரியான கேரக்டர்ல நடிக்கிறபோது, விஜய் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும்.” என்று கூறி இருக்கிறார்.
Next Story






