search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
    X

    உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே

    மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

    `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.



    இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika

    Next Story
    ×