search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அடுத்த வருடம் நம்முடையது - மாநாடு கதை கேட்ட சுரேஷ் காமாட்சி தகவல்
    X

    அடுத்த வருடம் நம்முடையது - மாநாடு கதை கேட்ட சுரேஷ் காமாட்சி தகவல்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி, சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு சிறப்பு விருந்தாக இருக்கும், அடுத்த வருடம் நம்முடையது என்று குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முழு கதையையும் தயார் செய்துவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு அதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளார்.


    கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு செமயான விருந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

    மாநாடு படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்துரைத்தார். கதை கேட்க ரோலர் கோஸ்டர் போல் இருந்தது. ஏற்ற இறக்கமான திரைக்கதை. கண்டிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு விருந்தாக அமையும். அதுமட்டுமின்றி சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு ஒரு முக்கிய படமாக இருக்கும். அடுத்த வருடம் நம்முடையது தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9 #STR #Maanadu

    Next Story
    ×