search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
    X

    கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி

    கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு உதவும் வகையில் விஜய் நிவாரண பொருட்களை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வருகிறார். #GajaCycloneRelief #Vijay
    கஜா புயலால் பாதிக்கப் பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு திரை உலகினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

    நடிகர் விஜய்யும் புயல் பாதித்த மக்களுக்கு ஓசையில்லாமல் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

    நேற்று காலை ரூ.5 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், வேட்டி சேலை போன்ற பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் புயலால் பாதிக்கப் பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கி கணக்குகளுக்கும், விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.



    நேற்று காலை விஜய் தொடர்பு கொண்டு, ரூ.5 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று தெரிவித்தார். இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம். அது, சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம்.

    இதுபற்றி மக்கள் இயக்கம் தலைமைக்குத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாகை மாவட்ட புயல் நிவாரண நிதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக்கணக்கிலும் ரூ.2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு பொருள்களாக மக்கள் பயனடையச் செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்தனர். #GajaCycloneRelief #Vijay

    Next Story
    ×