search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது - ரஜினிகாந்த்
    X

    உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது - ரஜினிகாந்த்

    ஏ.சி.சண்முகத்தின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறியிருக்கிறார். #Rajini
    கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். 

    பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டார். சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்று விட்டார்.



    உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×