search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசாணை வழங்கியிருப்பது தற்காலிக வெற்றி - ஜி.வி.பிரகாஷ்
    X

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசாணை வழங்கியிருப்பது தற்காலிக வெற்றி - ஜி.வி.பிரகாஷ்

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு வழங்கியுள்ள அரசாணை தற்காலிக வெற்றி என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். #Sterlite #GVPrakash
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார்.



    அரசாணை வெளியிட்டத்தற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ், இது தற்காலிக வெற்றி என்று கூறியிருக்கிறார். மேலும், ‘உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு... அரசாணை தற்காலிக வெற்றி.. நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது, மாறவும் கூடாது..!!’ என்று கூறியிருக்கிறார்.

    Next Story
    ×