என் மலர்
5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.
இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:
"பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.
மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.
திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.
நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.
திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.
மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.
மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.
மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''
இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.
மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.
டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.
3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-
"தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.
"எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?
அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''
இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைக்காக சமூக அக்கறை கொண்ட பாடல்களை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘டக்கரு டக்கரு’ என்ற ஆல்பத்தை வெளியிட்டு இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்கா நல்லூர், கோவை, மெரீனாவில் நடக்கும் போராட்டத்துக்கு நேரில் சென்று எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால், கோவையில் நான் கலந்துகொண்டபோது அங்கே நடந்த சில விஷயங்கள் என்னை மிகவும் புண்படுத்திவிட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது யாரென்று தெரியாத சிலபேர் இந்த போராட்டத்தை திசை திருப்பும் விதமாக தேச விரோத செயல்களை முன்னிறுத்தி கோஷமிடுகின்றனர். என்னையும் தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறேன். நான் ஒருபோதும் தேச விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன்.
அதுதவிர, இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை பற்றியும் அங்கே பேச ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலபேர் கெட்ட வார்த்தைகளில் வாசகங்களை எழுதி, கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் குழுமியிருந்த வ.உ.சி. மைதானத்திற்கு வெளியே யாரென்றே தெரியாத சிலபேர் கெட்ட வார்த்தைகளால் மத்திய அரசை வசைபாடிக் கொண்டிருந்தனர்.
எதற்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றும் நானும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும். இந்த பிரச்சினையை திசை திருப்பி விடாதீர்கள். ஜல்லிக்கட்டுக்கு வெற்றி கிடைத்தால்தான் இத்தனை இளைஞர்களின் போராட்டத்திற்கு மரியாதை கிடைக்கும்.
இன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு அரசியலுக்கு வருவதற்குண்டான அறிவோ தகுதியோ கிடையாது. எனக்கு தெரிந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடுபடுகிறேன். ஆனால், அதை பயன்படுத்தி என்னை அரசியலுக்குள் வரச்சொல்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இந்த போராட்டத்தை அரசியல் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை. நல்ல விஷயத்துக்காக எடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுதத்தும் வகையில் பீட்டா அமைப்பை சேர்ந்த ராதாராஜன் என்பவர், இலவச செக்ஸ் என்றால்கூட மெரீனாவில் அதிகமான இளைஞர்கள் கூடுவார்கள் என்று கூறியிருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு தமிழ் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்யவேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷும் தனது சமூக வலைத்தளத்தில் ராதராஜனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுமபோது, ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம். இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் களமிறங்கியுள்ளார். மெரீனாவில் இளைஞர்களுடன் இளைஞர்களாக அவர் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் குழந்தை ஆராதனாவும் இந்த ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தில் களமிறங்கியுள்ளதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. ஒரு குழந்தை கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷத்துடன் விளம்பர பதாகையை ஏந்தியபடி வருவதுபோல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த குழந்தை சிவகார்த்திகேயனின் குழந்தை என்றும் கூறி வருகின்றனர்.
உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அரசியல்வாதிகளை கலங்கடித்து உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்று இரவு பகலாக 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய உணவு, தேநீர், பிஸ்கட் போன்ற வற்றை குமாரபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வழங்கி போராட்டத்தினை உற்ச்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குமாரபாளையம் போராட்டக் குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று பகல் 9 மணி அளவில் அந்த போராட்டத்தை தொடங்கி வைக்கவும், போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி திடீரென போராட்டப் பந்தலுக்கு வருகை தந்தார்.
அவரை போராட்டக் குழுவினர்கள் வரவேற்றனர். போராட்ட இளைஞர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
தமிழன் என்ற உணர்வோடு இங்கு போராடும் இளைஞர்களையும், இளம் பெண்களையும், இளைஞர்கள், மாணவர்களை பாராட்டுகிறேன். தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. அதனைத் தடை செய்ய வேண்டும் என்று பீட்டா என்ற வெளிநாட்டு கார்பரேட் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று தமிழனின் அடையாளத்தை அழிக்க முயல்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை நகரில் திரும்பிய திசை எல்லாம் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கி அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் செந்தமிழ் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நடிகர் பாக்கியராஜ் மதுரை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ- மாணவிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு என்பது தமிழக இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறி னார்
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு நடிகர்கள் வந்தால் ஏற்கமாட்டார்கள், அடிப்பார்கள் என்று கூறினார்கள். இந்த போராட்ட களத்துக்கு நான் நடிகனாக அல்ல தமிழனாக பேச வந்திருக்கிறேன். தமிழன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமுடியாது. எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் மாணவர்கள்-இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். என்றும் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்.
வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழர்கள். ஆனால் இனி வந்தாரை தமிழகத்தில் ஆளவிட வைக்கக்கூடாது. தமிழகத்தின் நாளைய ஆட்சி, தலைமுறை எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் மனதில் பட்டதை செய்யுங்கள். பெண்ணுக்கு கொடுக்கிற மரியாதை தாய் மண்ணுக்கும் கொடுக்கவேண்டும். இந்த போராட்டம் இதோடு நிறுத்தி விடக்கூடாது. இது வெறும் தொடக்கம் தான்.
காதலுக்காக மெரினாவில் கூட்டம் கூடும். இன்று வீரத்துக்காக மெரினாவில் மக்கள் கூடியுள்ளனர். தாய் நாட்டுக்கும், தாய் மண்ணுக்கும் என்றும் நன்றி உள்ளவனாக இருப்போம். ஜல்லிக்கட்டு நடத்த உறுதி ஏற்போம்.
இவ்வாறு சிம்பு பேசினார்.
இந்தப்படம் மூலம் நிர்மலா, `வெண்ணிற ஆடை நிர்மலா'வாகவும், மூர்த்தி, `வெண்ணிற ஆடை மூர்த்தி'யாகவும் மாறிப்போனார்கள். படத்தின் பெயர், இருவரிடமும் இணைபிரியாமல் ஒட்டிக்கொண்டு விட்டது.
வக்கீலுக்குப் படித்த மகன், அதற்காக பிராக்டீஸ் செய்வதை தவிர்த்து, விற்பனைப் பிரதிநிதியாக மாறி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்ததுதான் அப்பாவுக்குத் தெரியும். அதன்பிறகு ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்ட மூர்த்தி, படம் வெளிவரும்வரை பெற்றோரிடமும்கூட சொல்லவில்லை.
படம் வெளிவந்த பிறகும் மறைத்தால் சரியாக இருக்காது. யாராவது அப்பாவிடம் தவறாக சொல்லி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாமே சொல்லி விடுவது என முடிவு செய்தார், மூர்த்தி. ஊருக்கு வந்து அப்பாவை சந்தித்த அவர், பேச்சினூடே தனக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்பு பற்றியும், நடிப்பிலும் எதிர்காலப் பிரகாசம் இருப்பது பற்றியும் நாசூக்காக சொல்லிவிட்டார். சொல்லி முடித்த பிறகு அப்பாவிடம் இருந்து பெரிய பிரளயத்தை எதிர்பார்த்தார். ஆனால் பலவீனமான அப்பாவிடம் இருந்து வெளிப்பட்டது அவரது உதடுகளில் இருந்து புன்னகைக்கீற்றுதான். "நல்லது கெட்டது தெரிஞ்சுக்கிற வயது உனக்கு வந்தாச்சு. எதில் ஆர்வமோ அதில் சாதிக்கப்பார்'' என்று சொன்னார் அப்பா.
ஆனால் மூர்த்தியின் அப்பாவால் மகன் நடித்த `வெண்ணிற ஆடை' படத்தை பார்க்க இயலவில்லை. உடல் நலம் குன்றி அக்டோபரில் காலமாகி விட்டார். அம்மாவும் அப்போது அந்தப் படத்தை பார்க்காமலே இருந்து விட்டார். அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பியபோது மகனை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
`வெண்ணிற ஆடை' வெற்றிப்பட பட்டியலில் நிச்சயம் சேரும் என்று நம்பினார் டைரக்டர் ஸ்ரீதர். ஆனால் கதைக்காக "ஏ'' சர்டிபிகேட் பெற்ற படத்தில், ரசிகர்கள் `எதிர்பார்த்த அம்சங்கள்' இல்லாததால் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை. பிறகு `பிக்அப்' ஆகி, நூறு நாட்கள் ஓடியது.
வெண்ணிற ஆடை படம் ரிலீசாகி 6 மாதம் ஆகியும் மூர்த்தியை தேடி ஒரு தயாரிப்பாளர்கூட வரவில்லை. இதனால் தவறான பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோமோ என்று மூர்த்தி கூட கலக்கமுற்றார். உள் மனதில், பேசாமல் "சீனியர் வக்கீல் யாரிடமாவது ஜுனியராக சேர்ந்து விடுவோமா?'' என்றுகூட யோசித்தார். பிறகு எப்போதுதான் அடுத்த பட வாய்ப்பு வந்தது! அதுபற்றி `வெண்ணிற ஆடை' மூர்த்தி கூறியதாவது:-
டைரக்டர் டி.என். பாலு அப்போது கதாசிரியராக இருந்தார். அவர் எழுதிய `காதல் படுத்தும்பாடு' கதையை டைரக்டர் ஜோசப் தளியத் படமாக எடுக்கிறார் என்பதை அறிந்தேன். படத்தில் தங்கவேலு சாருடன் கூடவே வருகிற ஒரு கேரக்டரில் நடிக்க ஆள் தேடிக்கொண்டிருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால் டைரக்டர் ஜோசப் தளியத்தை சந்தித்து பேசினேன்.
நான் ஏற்கனவே டைரக்டர் ஸ்ரீதர் சாரின் படத்தில் நடித்திருப்பதை சொல்லி `சான்ஸ்' கேட்டேன். அவர் என்னிடம் "அந்தப்படத்தில் நீ நடித்த காமெடி போர்ஷனை மட்டும் வாங்கி வர முடியுமா?'' என்று கேட்டார். (விசிடி வராத காலம் அது) நான் ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது அவர்களும் பெருந்தன்மையாக நான் நடித்த ரீலை கொடுத்து அனுப்பினர்.
அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் ஜோசப் தளியத், என் நடிப்பில் திருப்தியடைந்து அவரது படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார். தங்கவேலு சாருடன் வருகிற அந்த ஜாலி கேரக்டரும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது.
டைரக்டர் ஜோசப் தளியத் ரொம்பவே பெருந்தன்மையானவர். படத்தை தயாரிப்பதும் அவரே என்பதால் சகல விஷயத்திலும் அவரது நேரடிப் பார்வை இருக்கும். சின்னவொரு விஷயத்தில்கூட அவரது அணுகுமுறை நமக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும். செட்டில் தங்கவேலு சாருடன் நடித்துக் கொண்டிருந்தேன். `லஞ்ச் பிரேக்' வந்தது. தங்கவேலு சாரை தனியறைக்கு சாப்பிட அழைத்துப் போனார்கள்.
என்னையோ கம்பெனி ஆட்கள் சாப்பிடுகிற இடத்துக்கு அழைத்துப்போனார்கள். இதை பார்த்துவிட்ட டைரக்டர் ஜோசப் தளியத் தனது தயாரிப்பு நிர்வாகியை உடனடியாக அழைத்து, "மூர்த்தியை நடிகர் தங்கவேலு சாப்பிடப்போகும் அதே அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிட வையுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். நடிப்பில் வளரும் முன்பே எனக்கு அவர் மூலம் கிடைத்த இந்த மரியாதை என்னை நெகிழச் செய்தது.''
இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.
படத்தில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருந்தாலும், மூர்த்தியை நாடக உலகமும் கவர்ந்திழுத்தது. `சித்ராலயா' கோபுவுடன் சேர்ந்து நாடகங்களையும் நடத்த ஆரம்பித்தார். கோபுவுடன் சேர்ந்து `காசேதான் கடவுளடா', `வீட்டுக்கு வீடு', `ஸ்ரீமதி' போன்ற நாடகங்களை நடத்தினார். இதில் ஒரு ஆங்கில புத்தகத்தில் மூர்த்தி படித்த ஒரு கதையை கோபுவிடம் சொல்ல, அவர் அதையே நாடகமாக்கினார்.அதுவே"காசேதான் கடவுளடா'' நாடகம்.
இந்த "காசேதான் கடவுளடா'' நாடகம், பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் விலா நோகச் சிரிக்க வைத்தது. மனம் விட்டுச் சிரித்தவர்கள் மறுபடி மறுபடி நாடகம் பார்க்க வந்தார்கள்.
ஒருநாள் இந்த நாடகத்தை பார்க்க ஏவி.மெய்யப்ப செட்டியார் வந்தார். நாடகம் பிடித்துப்போக, அதை படமாக்கும் முடிவுக்கு வந்தார். கோபு உள்ளிட்ட பலருக்கும் அப்போது அட்வான்ஸ் கொடுத்தார். எல்லோரும் உற்சாகத்தில் துள்ளினார்கள்.
இந்தப்படத்தில் மூர்த்திக்கும் இடம் கிடைத்தது. படத்தில் நடித்ததற்காக 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இது மூர்த்தியை ரொம்பவே உற்சாகப்படுத்தியது.
காரணம், அதுவரை படங் களுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் தான் வாங்கினார். செட்டியார் உபயத்தில் 2 ஆயிரம் உயர்ந்தது.
ஆனால் "காசேதான் கடவுளடா'' நாடகம் பல தடவைகள் மேடையேறியதால், நாடகத்தின் மூலமாக மட்டும் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பளமாக கிடைத்தது, மூர்த்திக்கு.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட் மாட்டோம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். கருப்பு நிறத்தில் டாப்ஸ் அணிந்து முகத்தை கருப்பு துணியால் மூடியபடி எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நயன்தாரா போராட்டத்தில் கலந்து கொண்டார்.
முன்னதாக ''இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது'' என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நயன்தாரா அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.
இது பிரமாண்ட பேய் படமாக தயாராகிறது. இதற்காக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாறுபட்ட பேய் படமாக உருவாக இருக்கிறது.
இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக உருவெடுத்துள்ள கார்த்திக் நரேன், தனது பங்குக்கு `துருவங்கள் பதினாறு' படத்தின் நாளை ஒருநாள் வசூலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் போராட்டக்காளர்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரகுமான் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போது அந்த இயக்குனரை நம்பிய ரகுமானுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு காரணமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை திரைஉலகில் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூத்த டைரக்டர்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இது வரை யாரும் சொல்லாத திரைக்கதையில் சொன்னது, கார்த்திக் நரேனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரையங்குகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நாளை நல்ல வசூல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.








