என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய வாகனங்கள் உருவாக்கும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா கூட்டணி
Byமாலை மலர்4 Jan 2021 10:37 AM GMT (Updated: 4 Jan 2021 10:37 AM GMT)
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து புதிய வாகனங்கள் உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன.
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சில புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இரு நிறுவனங்களும் தங்களின் பிராண்டிங்கில் சிறிய கார் மற்றும் எம்பிவி மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் சிறிய கார் 560B எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் 2021 ஆண்டு இறுதியிலோ அல்லது 2022 துவக்கத்திலோ விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இது பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் காம்பேக்ட் பேட்டரி எலெக்ட்ரிக் வெஹிகில் பிளாட்பார்ம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
எம்பிவி-யை பொருத்தவரை இந்த கார் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றும் இது எர்டிகா மற்றும் இன்னோவா க்ரிஸ்டா இடையே உள்ள இடைவெளியை போக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது ரீபேட்ஜ் வெர்ஷனாக இல்லாமல் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X