என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவக்கம்
Byமாலை மலர்15 Dec 2020 10:30 AM GMT (Updated: 15 Dec 2020 10:30 AM GMT)
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இது 2021 ஆண்டு ஆடி நிறுவனத்தின் முதல் வெளியீடாக ஏ4 பேஸ்லிப்ட் இருக்கும். இந்த கார் பி9 ஆடி 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.
புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X