என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் புதிய லோகோ அறிமுகம்
Byமாலை மலர்24 Jun 2020 10:38 AM GMT (Updated: 24 Jun 2020 10:38 AM GMT)
பிஎம்டபிள்யூ குழுமத்தின் புதிய லோகோ இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் தனது புதிய லோகோவினை அறிமுகம் செய்துள்ளது. புதிய லோகோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இத்துடன் புதிய லோகோ நிறுவனத்தின் புதிய பிராண்டு வடிவமைப்பை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை பரைசாற்றும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பத்த துறைக்கு மாறுவதை குறிக்கும் வகையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் வாடிக்கையாளர்களுடனான உறவை என்றும் கொண்டாடி இருக்கிறது. மேலும் பல்வேறு புதுமை மிக்க வாகனங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்சமயம் புதிய லோகோ வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான பார்வையை குறிக்கும் என பிஎம்டபிள்யூ இந்தியா குழுமத்தின் அர்லிண்டோ டெய்க்சிரா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X