என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கார் வெளியீட்டை ஒத்திவைத்த ஹூண்டாய்
Byமாலை மலர்27 April 2021 10:37 AM GMT (Updated: 27 April 2021 10:37 AM GMT)
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் எஸ்யுவி இந்திய வெளியீடு மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் அல்காசர் மாடல் இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னதாக அல்காசர் உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
முந்தைய தகவல்களின்படி ஹூண்டாய் அல்காசர் மாடல் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருந்தது. தற்போது இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், மே மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
அதன்படி புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலின் வீல்பேஸ் 2760 எம்எம் ஆக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் 2.0 லிட்டர் பெட்ரோல், யு2 1.5 விஜிடி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 155 பிஹெச்பி மற்றும் 112 பிஹெச்பி திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முந்தைய தலைமுறை என்ஜினை விட புதிய என்ஜின் 7 பிஹெச்பி கூடுதல் திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் அல்காசர் மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X