என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மூன்று மாடல்களுக்கு முன்பதிவை துவங்கிய ஆடி
Byமாலை மலர்13 May 2020 10:15 AM GMT (Updated: 13 May 2020 10:15 AM GMT)
ஆடி நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் விநியோக விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது ஏ6 செடான், ஏ8 எல் செடான் மற்றும் கியூ8 எஸ்யுவி மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. மூன்று மாடல்களையும் வாடிக்கையாளர்கள் ஆடி ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 50 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
மூன்று ஆடி மாடல்களும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் முன்பதிவு மற்றும் விற்பனை நடைபெறாமல் இருந்தது. தற்சமயம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதால், ஆடி நிறுவனம் மீண்டும் முன்பதிவை துவங்கியுள்ளது.
தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் மாடல்கள் ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆடி ஏ6 துவக்க விலை ரூ. 54.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டும் 45TFSI பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
புதிய ஆடி ஏ8 எல் மாடலில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆடி கியூ8 மாடலிலும் ஏ8 எல் மாடலில் உள்ளது போன்று 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X