search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    டாடா கார்
    X
    டாடா கார்

    ஜனவரி 2022 முதல் கார் மாடல்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன மாடல்களின் விலையை அடுத்த மாதம் மாற்றியமைக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து செலவீனங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி டாடா மோட்டார்ஸ் கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.

    பயணிகள் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் தற்போது நெக்சான், ஹேரியர், சபாரி, அல்ட்ரோஸ், டிகோர் மற்றும் டியாகோ போன்ற மாடல்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது.

     டாடா கார்

    'உதிரி பாகங்கள், இதர பொருட்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜனவரி 2022 முதல் கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
    Next Story
    ×