என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா அல்ட்ரோஸ்
Byமாலை மலர்28 Sep 2021 9:10 AM GMT (Updated: 28 Sep 2021 9:10 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 20 மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.
அல்ட்ரோஸ் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் மாடல் குளோபல் என்கேப் பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X