என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த காரின் முன்பதிவு மீண்டும் துவக்கம்
Byமாலை மலர்30 Jun 2021 9:05 AM GMT (Updated: 30 Jun 2021 9:05 AM GMT)
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் மீண்டும் துவங்கி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் M340i மாடலை இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் விலை ரூ. 62.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மொத்தத்தில் 40 யூனிட்களே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் வெளியான ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன.
தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் டன்சனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M340i மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 387 பிஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X