என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மாருதி சுசுகி - டொயோட்டா கூட்டணியில் புது செடான் வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்22 April 2021 9:51 AM GMT (Updated: 22 April 2021 9:51 AM GMT)
மாருதி சுசுகி சியாஸ் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் பலேனோ மாடலை தழுவி கிளான்சா, விட்டாரா பிரெஸ்ஸா மாடலை தழுவி அர்பன் குரூயிசர் மாடல்கள் இந்திய சந்தையில் இதுவரை வெளியாகி இருக்கின்றன. இருநிறுவனங்கள் இடையிலான கூட்டணி 2017 ஆம் ஆண்டு துவங்கியது.
இரு மாடல்களை தொடர்ந்து மாருதி சுசுகியின் சியாஸ் செடான் மாடல் டொயோட்டா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய செடான் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மற்ற இரு மாடல்களை போன்றே புதிய மாடலிலும் டொயோட்டா பேட்ஜ், ஸ்டீரிங் வீல் மற்றும் மல்டி-இன்போ டிஸ்ப்ளே மட்டும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கார் சியாஸ் தற்போது வழங்கும் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X