என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்
Byமாலை மலர்28 Nov 2020 10:42 AM GMT (Updated: 28 Nov 2020 10:42 AM GMT)
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்க இருக்கிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பூனேவில் உள்ள பாரமதி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இத்துடன் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 புதிதாக புளூ நிறத்திலும் கிடைக்கும் என பியாஜியோ அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை பியாஜியோ 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த மாடல் சிவப்பு நிற பெயின்டிங் மற்றும் பிளாக் இன்சர்ட்களை கொண்டிருந்தது.
அப்ரிலியா தனது எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் ஏற்கனவே வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
சத்திவாய்ந்த அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் அப்ரிலியா எஸ்ஆர் 160 பிஎஸ்6 ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின 10.8 பிஹெச்பி பவர், 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X