search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ராயல் என்ஃபீல்டு
    X
    ராயல் என்ஃபீல்டு

    மீண்டும் திறக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்கள்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை மையங்கள் நாடு முழுக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக திறக்கப்படுகின்றன.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மூடப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு இன்று (மே 18) துவங்கி மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்களில் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு சில பணிகளை துவங்க முடியும்.

    ராயல் என்ஃபீல்டு பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    எனினும், விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் அழைப்பு மூலம் முன்பதிவு பெற்று வரவேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    Next Story
    ×