என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிரோன்
    X
    டிரோன்

    கொரோனா வைரஸ் கிருமியை கொல்ல டிரோன் பயன்பாடு அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிக்க டிரோன் பயன்படுத்தப்படுகிறது.



    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினிகளை தெளிக்க டிரோன்  பயன்படுத்தப்படுகிறது. கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு துறைகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் கிறுமி நாசினிகளை தெளிக்க டிரோன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கிருமி நாசினிகள் பொது இடங்களில் வேகமாக தெளிக்கப்பட்டு வருகின்றன.

    ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அரசு சார்பில் பயன்படுத்தப்படும் டிரோன்களில் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஆறு புரோப்பல்லர்கள், 15 லிட்டர்கள் வரையிலான கிருமி நாசினிகளை அடைக்குமளவு பெரிய ஸ்டோரேஜ் டேன்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த டிரோன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், டிரோனினை ஒருமுறை சார்ஜ் செய்து மூன்று ஏக்கர் நிலப்பரப்பின் மீது கிருமி நாசினிகளை தெளிக்க முடியும்.
    Next Story
    ×