டென்னிஸ்
மான்டி கார்லோ டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்
- மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மான்டி கார்லோ:
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.